ahamed 的个人资料Khan Brothers.Adirampatt...照片日志列表更多 ![]() | 帮助 |
|
|
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்காக 5 ஆண்டு முதுநிலை படிப்பு: பாரதியார் பல்கலைக்கழகம் திட்டம்ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையிலான 5 ஆண்டு முதுநிலைப் பட்டப்படிப்பை வழங்க பாரதியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் 5 ஆண்டு முதுநிலைப் பட்டப்படிப்பை வழங்க பாரதியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. விஜயகாந்தின் கேப்டன் டி.வி.விஜயகாந்தின் கேப்டன் டி.வி.
நுகர்வோர் சேவை மையம் தொடக்கம்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தொலைபேசி, இ.மெயில் மூலம் புகார் தெரிவிக்க "நுகர்வோர் சேவை மையம்' தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
இணையதள வணிகம், பரிசுத் திட்டங்கள், கலப்படம், எடைக் குறைவு, அதிகமான விலை, காலாவதியான பொருள்கள், பொய்யான விளம்பரங்கள் என்று பல்வேறு பிரச்னைகளை வெளிச்சந்தையில் நுகர்வோர்கள் இப்போது சந்தித்து வருகின்றனர்.
எனவே வாங்கும் பொருளுக்கு ஐ.எஸ்.ஐ., அக்மார்க், எப்.பி.ஒ. போன்ற தர முத்திரைகள் உள்ளதா என்று நுகர்வோர்கள் சரிபார்க்க வேண்டும்.
பொருள்கள் அடங்கிய பொட்டலத்தின் மீது அதிகபட்ச சில்லறை விலை, தயாரிப்பாளர் விவரம், காலாவதி தேதி ஆகியவை இல்லாத பொருள்களை தவிர்க்க வேண்டும்.
பொருள்கள் வாங்கிய பிறகு தரப்படும் ரசீதில் விற்பனையாளர் முகவரி, மதிப்பு கூட்டு வரி, சேவை வரி, பதிவு எண் ஆகியவை உள்ளதா? என்று சரிபார்க்க வேண்டும்.
ரேஷன் கடை பிரச்னைகள்: ரேஷன் கடை குறித்த நேரத்தில் இயங்காதது, எடைக் குறைவு, அனைத்துப் பொருள்களும் கிடைக்காதது, குடும்ப அட்டை புதிதாக பெறுவது, விலாசம் மாற்றுவது போன்ற பிரச்னைகள் குறித்தும் இம்மையத்தில் புகார் தெரிவிக்கலாம். ஆலோசனை பெறலாம்.
044 -2859 2828 என்ற தொலைபேசி எண்ணிலும், ஸ்ரீர்ய்ள்ன்ம்ங்ழ்ஃற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இ.மெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.
கடிதம் மூலம் புகார் தெரிவிக்க வேண்டிய முகவரி:
மாநில நுகர்வோர் சேவை மையம், ஆணையாளர் அலுவலகம், உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை. எழிலகம் 4-வது தளம், சேப்பாக்கம், சென்னை -5. சீனாவை விட இந்தியா செழிப்பு ஓர் ஆய்வுத் தகவல்செழு-மையான நாடுகள் பட்டி-யலில் இந்தியாவுக்கு 45ஆவது இடம் கிடைத்-துள்ளது. இந்தப் பட்டிய-லில் சீனா, 75ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவை விட சீனா ராணுவ ரீதியில் பலம் வாய்ந்த நாடாக இருக்கலாம். ஆனால் செழுமையான நாடுகள் வரிசையில் இந்தியா, சீனாவை விட மிக உயரத்-தில் உள்ளது. லிகேட்டம் பிராஸ்பரி-டிட்டி இன்டெக்ஸ் இந்-தத் தகவலை தெரிவித்து உள்-ளது. இந்த ஆய்வில் இந்தியாவுக்கு 45ஆவது இடமும், சீனாவுக்கு 75-ஆவது இடமும் கிடைத்து ள்ளன. உலகின் மக்கள் தொகை-யில் 90 சதவிகிதத்தைக் கொண்டுள்ள 104 நாடு-களின் வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றை தொகுத்து இந்த தரவரிசைப் பட்டி-யலை லிகேட்டம் வெளி-யிட்டுள்ளது. இது 3ஆவது ஆய்வாகும். பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத்-தரம், மக்களின் மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்ப-ட-யாகக் கொண்டு இந்த சர்வே நடத்தப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை விட சீனா பல்வேறு பொருளாதாரப் பிரிவு-களில் எங்கேயோ உள்-ளது. ஆனால் சீனாவிடம் இல்லாத ஜனநாயகம், சகிப்புத்தன்மை, இனக் குழுக்களுக்கிடையிலான நல்லிணக்கம், மத சுதந்-திரம், பேச்சு சுதந்திரம், ஒருமைப்பாடு, சிறுபான்-மையினரை மதிக்கும் தன்மை, அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவை காரணமாக, இந்தியா, சீனாவை பின்னுக்குத் தள்ளி விட்டது. இதுகுறித்து லிகேட்-டம் கழகத்தின் மூத்த துணைத் தலைவர் வில்-லி-யம் இன்போடன் கூறு-கையில், மிகச் சிறந்த சமூகக் கட்டமைப்பு மற்-றும் அருமையான வாழ்க்-கைத் தரம் ஆகியவற்-றைப் பேணுவதில் இந்-தியா மிகச் சிறப்பாக உள்ளது. இந்தியாவை விட பொருளாதார ரீதி-யில், சீனா பல மடங்கு உயரத்தில் இருந்தாலும் கூட, அங்கு ஜனநாயகம் இல்லாமை, பேச்சுச் சுதந்திரம், மத சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என எதுவுமே இல்லாததால், சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்-னணி பெற்றுள்ளது என்றார். சமூகப் பிரிவில் இந்-தியா, அமெரிக்காவை விட முன்னுக்கு உள்ளது. அதாவது அய்ந்தாவது இடத்தைப் பிடித்துள்-ளது. அறிமுகம் இல்லாத-வர்களுக்கும் உதவும் தன்மை, இல்லாத-வர்-களுக்கு உதவுவது, தொண்-டுப் பணிகளில் அதிக அக்கறை காட்டு-வது, குடும்பத்தினர், நண்-பர்கள் என்று உறவு-முறைகளை வலுவாக வைத்துக் கொள்வது போன்றவற்றில் இந்தியா சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா 6ஆவது இடத்திலும், இங்கிலாந்து 7ஆவது இடத்திலும், பின்லாந்து 8ஆவது இடத்-திலும் உள்ளன. கல்வி, சுகாதாரத்தில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. சுகாதா-ரத்தில் 88ஆவது இடத்-தை-யும், கல்வியில் 86ஆவது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது. நவீனமயமாக்கல், சிறு தொழில் பிரிவில் இந்-தியாவுக்கு கிடைத்திருக்-கும் தர வரிசை 55. இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள் பின்-லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து.
சைப்ரஸ் சென்றிருந்த குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு அந்நாட்டு ராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். உடன் சைப்ரஸ் அதிபர் டிமிட்ரிஸ் கிறிஸ்டோ பியாஸ் உள்ளார் நோக்கியா நிறுவனத்தில் +2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது நோக்கியா நிறுவனத்தில் +2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7.11.2009 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடத்த உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மாத ஊதியம் ரூ.4400/- மற்றும் இலவச உணவுடன் ரூ.1000/-ற்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும். +2 ல் 60 சதவீத மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ள பொய்யென நிரூபிக்க சிறிலங்கா அரசு பயன்படுத்திய வீடியோ போலியானது ஓகஸ்டில் சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ பொய்யானது என அரசு கூறுகிறது. அது பொய்யானது, சித்தரிக்கப்பட்டது என்றெல்லாம் கூறும் சிறிலங்கா அரசு அதை விஞ்ஞான ரீதியாக நிரூபித்துள்ளதாகவும் கூறுகிறது.
ஆனால் இவ்வாறு பொய்யென நிரூபிப்பதற்காக அரசு உண்மையான வீடியோவைப் பயன்படுத்தவில்லை.
அதாவது கைத்தொலைபேசியால் எடுக்கப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டதைத் தாம் பதிவு செய்து அந்த வீடியோவையே பயன்படுத்தி தமது நிரூபித்தல்களைச் செய்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன அழிப்புக்கு எதிரான் தமிழர்கள் மேற்கொண்ட ஆய்விலிருந்தே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக இன அழிப்புக்கு எதிரான அமைப்பு அமெரிக்க நிபுணர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
அமெரிக்க நிபுணர்கள் கொடுத்த ஆரம்பகட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன,
ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட வீடியோ .gp3 கோப்பாகும். ஆனால் சனல் 4 உட்பட அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் பயன்படுத்தியது வலை- ஒளிபரப்பு பதிவு என்னும் மாற்றப்பட்ட வடிவமாகும். அதாவது H263 (.gp3) வடிவத்திலிருந்து Flash-9, 10 இல் இயக்கக்கூடிய .avi வடிவமாக மாற்றப்பட்ட H264 வடிவத்தையே அரசு பயன்படுத்தியுள்ளது. ஒளி, ஒலி என்பவை சரியாக ஒத்திசையவில்லை என இலங்கையரசு சுட்டிக்காட்டியிருந்தது. இது இவ்வாறு வடிவம் மாற்றப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தியதால் தோன்றியது எனக் கூறுகின்றனர் அமெரிக்க நிபுணர்கள்.
ஆனால் கைத்தொலைபேசி .gp3 வீடியோ எடுக்கப்பட்டது ஜூலை 18 எனப் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ ஜனவரி மாதத்தில் ஒரு இராணுவ வீரரால் எடுக்கப்பட்டதென ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பு கூறுகிறது. இந்த திகதிச் சிக்கலைத் தீர்ப்பது பற்றியும் தாம் சிந்தித்து வருவதாக இன அழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பு கூறியுள்ளது கைகூப்பி உயிர் பிச்சை கேட்டவரை அடித்து கொலை செய்த அராஜகத்திற்கு எதிராக 4ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்-வீடியோ இணைப்புகுடும்பத்தின் நலம் காத்திட, நாட்டின் வளம் பெருக்கிட நாளும் சேமிப்போம்: கலைஞர்சேமிக்கும் உணர்வை குழந்தைப் பருவம் முதலே உருவாக்கி வளர்ப்போம். குடும்பத்தின் நலம் காத்திட, நாட்டின் வளம் பெருக்கிட நாளும் சேமிப்போம் என உலக சிக்கன நாள் செய்தியில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டள்ள அறிக்கையில், பல்வேறு இடங்களில் தனியார் அமைப்புகளில் சேமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு பலர் அல்லல்களுக்கு ஆளாவதை செய்தித்தாள்கள் வாயிலாக அறியும் பொழுது, நாம் வருந்த நேர்கிறது. பாடுபட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பு உணர்வோடு சேமிப்பது தானே முறை. அதற்கு தபால் நிலையங்கள், அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவை உதவும். அங்கு சேமிப்பதன் மூலம் சேமிக்கும் பணத்திற்கு பாதுகாப்பு கிடைப்பதுடன் பல நன்மைகளும் நமக்கு கிடைக்கும். சிறுகச் சிறுக சேமிக்கும் தொகை பெருந்தொகையாகி, அரசுக்கு கிடைக்கிறது. அந்த நிதி அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பயன்படுகிறது. வட்டியும், முதலும் சேர்ந்து கிடைப்பதால் சேமிப்பவர்களின் குடும்பத்தின் அவசர தேவைகளை நிறைவு செய்ய பெரிதும் உதவுகிறது. தனி மனிதரின் சேமிப்பு அவருக்கு பயன் தருவதுடன் அரசின் திட்டங்களை நடை முறைப்படுத்துவதிலும் துணை புரிகிறது.
மொட்டை அடித்து பெண் சித்ரவதை : கணவர், மாமியார் கைது
கோவை, கோட்டைமேடு, சாமராவ் வீதியில் வசிப்பவர் இப்ராகிம்ஷா(35); ரெடிமேடு ஆடை விற்பனை மையம் வைத்துள்ளார். இவரது மனைவி நதீரா பானு(26). இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். சில நாட்களுக்கு முன், இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், நதீராபானு கோபித்துக் கொண்டு, பெற்றோரிடம் சென்று விட்டார். ஜமாத்தில் நடந்த சமரசத்துக்குப் பின் நதீராபானு, மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார். 24ம் தேதி இரவு, இவர்களது குழந்தைகள் மூவரும் பாட்டி வீட்டுக்கு சென்றனர். அம்மா எங்கே இரண்டு நாட்களாக வெளியில் வரவில்லை என கேட்டதற்கு, பதிலளித்த குழந்தைகள், அப்பா, சித்தப்பா, அத்தை மற்றும் பாட்டி ஆகியோர் அம்மாவுக்கு மொட்டை அடித்து விட்டனர். அதனால் வெளியில் வரவில்லை என சோகத்துடன் தெரிவித்தனர். குழந்தைகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நதிராபானுவின் பெற்றோர், உக்கடம் போலீசில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, நதீராபானுவுக்கு வலுக்கட்டாயமாக மொட்டையடித்த, கணவர் இப்ராகிம்ஷா, இவரது தம்பி பைரோஷ், மாமியார் சரீபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இக்கொடுமைக்கு தூபம் போட்ட நாத்தனார் ஆமினா தலைமறைவாகி விட்டார். HAPPY INDEPENDENCE DAYHappy INDEPENDENCE Day VANDE MATARAM JAI H ........Let' s be the INDIAN's first...!!! HAPPY INDEPENDENCE DAY
ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் காய்ச்சலுக்கு இந்திய முழுவதும் மருத்துவ உதவிகள் கிடைக்குமிடங்கள்GOVERNMENT AUTHORIZED HOSPITALS FOR TREATMENT OF SWINE FLU City Hospital Address Contact Chennai King Institute of Preventive Medicine (24/7 Service) Guindy, Chennai – 32 (044) 22501520, 22501521 & 22501522 Communicable Diseases Hospital Thondiarpet, Chennai (044) 25912686/87/88, 9444459543 Government General Hospital Opp. Central Railway Station, Chennai – 03 (044) 25305000, 25305723, 25305721, 25330300 Pune Naidu Hospital Nr Le'Meridian, Raja Bahadur Mill, GPO, Pune – 01 (020) 26058243 National Institute of Virology 20A Ambedkar Road , Pune – 11 (020) 26006290 Kolkata ID Hospital 57,Beliaghata, Beliaghata Road , Kolkata - 10 (033) 23701252 Coimbatore Government General Hospital Near Railway Station, Trichy Road, Coimbatore – 18 (0422) 2301393, 2301394, 2301395, 2301396 Hyderabad Govt. General and Chest Diseases Hospital , Erragadda, Hyderabad (040) 23814939 Mumbai Kasturba Gandhi Hospital Arthur Road, N M Joshi Marg, Jacob Circle , Mumbai - 11 (022) 23083901, 23092458, 23004512 Sir J J Hospital J J Marg, Byculla, Mumbai - 08 (022) 23735555, 23739031, 23760943, 23768400 / 23731144 / 5555 / 23701393 / 1366 Haffkine Institute Acharya Donde Marg, Parel, Mumbai – 12 (022) 24160947, 24160961, 24160962 Kochi Government Medical College Gandhi Nagar P O, Kottayam - 08 (0481) 2597311,2597312 Government Medical College Vandanam P O, Allapuzha - 05 (0477) 2282015 Taluk Hospital Railway Station Road , Alwaye, Ernakulam (0484) 2624040 Sathyajit - 09847840051 Taluk Hospital Perumbavoor PO , Ernakulam 542 (0484) 2523138 Vipin - 09447305200 Gurgaon & Delhi All India Institute of Medical Sciences (AIIMS) Ansari Nagar, Aurobindo Marg Ring Road , New Delhi – 29 (011) 26594404, 26861698 Prof. R C Deka - 9868397464 National Institute for Communicable Diseases 22, Sham Nath Marg, New Delhi – 54 (011) 23971272/060/344/524/449/326 Dr. Ram Manohar Lohia Hospital Kharak Singh Marg, New Delhi – 01 (011) 23741640, 23741649, 23741639 Dr. N K Chaturvedi – 9811101704 Vallabhai Patel Chest Institute University Enclave, New Delhi- 07 (011) 27667102, 27667441, 27667667, 27666182 Bangalore Victoria Hospital K R Market, Kalasipalayam, Bangalore – 02 (080) 26703294 Dr. Gangadhar - 94480-49863 SDS Tuberculosis & Rajiv Gandhi Institute of Chest Diseases Hosur Road, Hombegowda Nagar, Bangalore – 29 (080) 26631923 Dr. Shivaraj - 99801-48780 PL. PASS ON THIS INFO. TO ALL THE PERSON YOU CARE STAY ALERT! PREVENT AGAINST SWINE FLU தமிழகத்திலும் டாடா டோகோமா சேவை
To get a taste of TATA DOCOMO GSM Mobile services, a subscriber can opt to Prepaid Starter Pack.’ For Rs. 49, The Starter pack comes with life Time Validity.The Postpaid service will be launch from 1 july 2009.
Here is the details TATA DoCoMo GSM Prepaid Starter Pack Price Rs.49 அரபு நாடுகளுக்கு 1 நொடிக்கு 17 காசு மட்டுமே
Text Messaging:-
Note: These are base-line tariffs offered without any add-on subscriptions whatsoever, and so does not reflect the complete tariff offerings of Tata DoCoMo. TATA DoCoMo Customer Care Number Tamil Nadu-9043012345 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை கைவிட மத்திய அரசு பரிசீலனை!புதுடெல்லி, ஜூன் 25 : மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத் தேர்வு முறையை கைவிடுவதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. தற்போது பத்தாம் வகுப்புத் தேர்வுகள் பொதுத்தேர்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தங்களது பிடித்தமான பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களே அடிப்படையாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நம் நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெரும் மாணவர்கள், தோல்வியடையும் மாணவர்கள் விரக்தியடைத்து தங்களது உயிரையே மாய்த்துக் கொள்ளும் அவலநிலையும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முறை மாற்றம் பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல், "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்துவது அவசியமா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேலும் விரிவாக கூறுகையில், "கல்வி முறை என்பது அறிவை வளர்ப்பதாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமைய வேண்டுமே தவிர, அதுவே மாணவர்களுக்குச் சுமையாக இருந்துவிடக் கூடாது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கைவிடுவது குறித்து மாநிலக் கல்வி வாரியங்கள், பள்ளிகள் மற்றும் பெற்றோர்களுடனும் தீவிர ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதால் மாணவ, மாணவியர் மன நெருக்கடிக்கு ஆளாவது தவிர்க்கப்படும். அத்துடன், படிப்பை ஆர்வத்துடனும், விருப்பத்துடனும் தொடர வழி வகுக்கும்," என்றார் அமைச்சர் கபில் சிபல். MP Election'09 Results - All India Watch
இறுதி லோக்சபா தேர்வு முடிவுகள் 2009
சிறந்த பிரதமர் யார்?: ஜெ-நாயுடுவுக்கு 'முட்டை'!டெல்லி: மக்களவைத் தேர்தலையொட்டி இந்தியா டுடே-மார்க்-எசி நீல்சன் ஆகியவை இணைந்து சிறந்த பிரதமராக யார் இருக்க முடியும் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். அதில் மன்மோகன் சி்ங்குக்கு 18 சதவீத வாக்குகளும் அத்வானிக்கு 12 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. தலைவர்கள் பெற்ற வாக்குகள் சதவீதம்: மன்மோகன் சிங்-18% சோனியா காந்தி-15% வாஜ்பாய்- 12% அத்வானி-12% ராகுல் காந்தி-8% நரேந்திர மோடி-6% மாயாவதி-5% முலாயம் சிங் யாதவ்-4% லாலு பிரசாத் யாதவ்-4% கருணாநிதி-1% நிதிஷ்குமார்-1% சரத்பவார்-1% பிரணாப் முகர்ஜி-1% பிரதமர் கனவோடு மூன்றாவது அணி அமைத்து ஒற்றைக் காலில் கொக்கு போல காத்துக் கொண்டுள்ள ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, தேவ கெளடா ஆகியோருக்கு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக 'முட்டையே' கிடைத்துள்ளது. மதவெறி பிடித்த பாரதீய ஜனதா எனும் கட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருக்கும் கூட்டணி என்பது திமுக தலைமையிலான கூட்டணியே ஆகும்தேர்தல் 2009! ஏறத்தாழ எல்லா கட்சிகளின் கூட்டணிகளும் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டன! தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி-சிறுத்தை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக மதிமுக பமக மற்றும் இரண்டு கம்யூணிஸ்ட்கள் மறு அணியாகவும் நின்று போட்டியிடுகின்றன. நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவும் களம் காண்கின்றது. போதாக்குறையாக மூன்றாம் அணியென்றும் நான்காவது அணியென்றும் சில லட்டர் பேட் கட்சிகள் அணிகளை உருவாக்கி வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றது. குறிப்பாக தமுமுக - மமக என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றது. திமுக கூட்டணியைப் பொறுத்த மட்டில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அறிவித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது. குறிப்பாகச் சொல்வதென்றால் முஸ்லிம்களுக்கு என மூன்றரைச் சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியானது தேசிய அளவில் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு மாற்றமான ஒரு வலுவான அணியாக உள்ளது. அதே வேளையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான பாமக ஆகிய கட்சிகள் வெளிப்படையாக இல்லாமல் ரகசிய ஒப்பந்தத்தின் வாயிலாக தேர்தலுக்குப் பின்னர் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சியும் கூட்டணி என்ற பெயரில் கார்த்திக் போன்றவர்களுடன் பம்மாத்து வேலை செய்துவருகின்றது. அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சியோடு கூட்டணி சேராமல் இருப்பது எதற்காகவென்றால், கணிசமான தமிழ் முஸ்லிம்களுடைய ஓட்டுக்களையும் பெற்றுவிட்ட பின்னர் ஆட்சியில் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்ற ரகசிய ஒப்பந்தம் ஆகும். அதன் அடிப்படையில் மதவெறி பிடித்த கட்சி ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து முஸ்லிம்களையும் அது போன்று கிறிஸ்தவர்களையும் துவம்சம் செய்து நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்திய காட்சிகள் இன்றும் தொடரவே செய்கின்றது என்றிருக்கையில் இந்த பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு ஆதரவளித்து தேசிய அளவில் அரியணை ஏற்றினால் அதன் பின்னர் அவர்களுடைய கோர தாண்டவத்தைச் சொல்லவா வேண்டும். ஆக தேசிய அளவிலான பயங்கரவாதம் தடுத்து நிறுத்தப்படவும் முஸ்லிம் - கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு ஓரளவு பாதுகாப்பான நிலையை ஏற்படுத்துவதற்கான மிகச்சரியான ஆயுதம் இந்த தேர்தலேயாகும். இந்த தேர்தல் மூலம் கிடைக்கும் வாய்ப்பை கை நழுவ விட்டுவிட்டு (ஒருவேளை) பாரதீய ஜனதாவின் ஆட்சியில் கோர்ட் கேஸ் என்று அலையலாம் என்பதை ஓரளவு உணர்வுள்ள ஒரு முட்டாள் கூட ஒப்புக்கொள்ளமாட்டான். முன்னர் ஆறு ஆண்டுகள் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது நாட்டில் பெரிய அளவிலான கலவரங்கள் நடக்காமல் இருந்தது கூட அவர்களுடைய கைங்கர்யமும் வெள்ளோட்டமுமே காரணமாக இருந்தது. எனினும் தற்போது பாஜாகாவின் செயல்பாடுகள் வெளிப்படையான பயங்கரவாதம் என்பதை குஜராத் மற்றும் ஒரிசா மாநிலங்களை உதாரணமாகக் கொண்டு புரிந்து கொள்ளலாம். எனவே மதவெறி பிடித்த பாரதீய ஜனதா எனும் கட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருக்கும் கூட்டணி என்பது திமுக தலைமையிலான கூட்டணியே ஆகும். நேற்றுவரை திமுகவை வரம்பின்றி புகழ்ந்து தள்ளிவிட்டு இன்று திமுக தங்களுக்கு இடம் தராத காரணத்தால் அந்த கூட்டணியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் மமகாவின் கூற்றையும் இங்கு கவனிக்கவேண்டியுள்ளது. தங்களுக்கு வாரியப்பதவி கிடைத்ததால் திமுகாவை ஆதரித்த இவர்கள் திமுகவினால் கழற்றிவிடப்பட்டபோது தங்களால் மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்ட அதிமுகவினரிடமும் இரண்டு தொகுதிகளுக்காக அலைந்தனர். அங்கும் சரியான சவுக்கடி கிடைத்ததும் தற்போது சமுதாயத்திற்கு பாடுபடும் முஸ்லிம் கட்சி என்று ஊர் ஊராக புலம்புகின்றனர். தாம் ஏற்கனவே கண்ணை மூடி ஆதரித்த திமுக வை (சீட் கிடைக்காத ஒரே காரணத்தால்) கன்னாபின்னாவெனத் திட்டித் தீர்க்கின்றனர். தாங்களும் சில தொகுதிகளில் போட்டியிடவும் செய்கின்றனர். இவர்கள் போட்டியிடாத தொகுதிகளில் இவர்கள் யாரை ஆதரிப்பார்கள்? பாப்பாத்தி என்று இவர்கள் கூறிய ஜெயலலிதாவையா? அல்லது இட ஒதுக்கீட்டுக்காக இவர்களால் நன்றியறிவிப்பு மாநாடு நடத்தப்பட்ட கருணாநிதியின் கூட்டணிக்கா என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும். மேலும் தேசிய அளவில் ஆட்சியை நிர்ணயிக்கும் தமிழகத்தின் இரண்டு கூட்டணிகளில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணி ஒருபக்கமும் தேர்தலுக்குப்பின் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கக் காத்திருக்கும் அதிமுக - பாமக கூட்டணி மறு பக்கமும் வாக்கு சேகரிக்கும் போது முஸ்லிம் கட்சி என்று கூறியே முஸ்லிம்களின் பொது எதிரியான பாரதீய ஜனதா கட்சியின் வெற்றிக்காக ஓட்டுக்களை பிரிக்க நினைக்கும் மமகவின் நிலைபாட்டை நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இது மமக வுக்கும் நன்றாகத் தெரியும். குறிப்பாக இவர்கள் கூட்டணி வைத்துள்ள (புதிய தமிழகம்) கிருஷ்ணசாமிக்காக தென்காசி தொகுதியில் பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ள சரத்குமாரும் கார்த்திக்கும் பிரச்சாரம் செய்யப்போவதாக வரக்கூடிய செய்திகளும் கைமாறாக அவர்கள் போட்டியிடும் தொகுதியில் புதிய தமிழகம் போட்டியிடாது என்ற கிருஷ்ணசாமியின் அறிக்கையும் தௌ;ளத் தெளிவாக பாஜகவை ஆதரிக்கும் ஒரு நடவடிக்கை என்றால் மறுக்க இயலாது. ஆனாலும் தங்களது மானத்தைக் காக்க சமுதாயத்தை அடகு வைத்தாவது காரியம் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சமுதாயம் சரியான பாடத்தை புகட்டித்தான் ஆகவேண்டும். அது முஸ்லிம்களுக்கு வேட்டு வைக்கும் மமக போன்ற முஸ்லிம் கட்சியாக இருந்தாலும் சரியே. அதை விட பாசிசத்திற்கு எதிரான முஸ்லிமல்லாத கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள் லட்சம் மடங்குகள் மேலானவை என்பதை தமிழக முஸ்லிம்கள் உணர்ந்து வாக்களிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். எம். எம். அவுலியா மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி பிடிக்கும்,தமிழகத்திலும் வெற்றி உறுதி.
செல்போன் பைத்தியங்கள் - உஷார் மாக்கான்Cellular & Mobile Phones: Stupid Things To Try With Your Phone செல்போனை வைத்து என்ன ஒரு காமெடி பண்றார் பாருங்க Step 1: Open your car Step 2: Check for a faulty microwave Step 3: Mobile phone throwing ஒளியோவியம்: இந்த video வுக்கே இப்படின்னா Broken Apple Iphone 3G படங்களைப் பார்த்தால் என்ன சொல்வீங்களோ. மன திடம் உள்ளவர்கள் மட்டும் பார்வையிடவும் (:- ஆவேச பிரச்சாரங்களின் மத்தியில் ஒரு அமைதியான பிரச்சாரம்
1.உங்களுக்கு நன்மை செய்பவர் எவர் என்பதை அறிந்து அவர் மேல் நம்பிக்கை இருந்தால் வாக்களியுங்கள் 2.இந்த தேசம் எந்த அரசியல்வாதிகளுடையதும் அல்ல இது உங்கள் தேசம் 3.உங்கள் தொகுதியை முன்னேற்ற பாதையில் இட்டு செல்பவர் யார் என்பதை உணர்ந்து வாக்களியுங்கள். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|